#BIG NEWS:-இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தேர்வு..!

#BIG NEWS:-இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தேர்வு..!

#BIG NEWS:-இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தேர்வு..!
X

இலங்கையில், மக்களின் கடுமையான எதிர்ப்புகளை தொடர்ந்து, ஜனாதிபதியாக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் 20-ம் தேதி (இன்று) நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்தலில், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கவும், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியில் இருந்து பிரிந்து வந்துள்ள டல்லஸ் அழகப்பெருமாவும், ஜனதா விமுக்தி பெரமுன சார்பில் அனுரா குமார திசநாயகவும் போட்டியிட்டனர்.

எதிர்க்கட்சி தலைவரும், சமாகி ஜெய பலவேகய கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவும் போட்டியில் இருந்தார். இந்நிலையில், அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக சஜித் பிரேமதாச நேற்று திடீரென அறிவித்தார். ஆளுங்கட்சி வேட்பாளர் டலஸ் அழகப்பெரும வெற்றி பெற தனது கட்சியும், கூட்டணி கட்சிகளும் கடுமையாக பாடுபடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, டலஸ் அழகப்பெரும, அனுரா குமார திசாநாயக்க ஆகிய 3 பேர் களத்தில் இருந்தனர். அவர்களின் வேட்புமனுக்கள் முன்மொழியப்பட்டு, வழிமொழிய பட்டிருந்தன.

இந்த சூழலில், அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே 134 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளும், அனுரா குமார திசாநாயக்க 3 வாக்குகளும் பெற்றனர்.

மொத்தம் உள்ள 225 எம்பிக்களில் 2 பேர் ரகசிய வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில் 223 எம்பிக்கள் வாக்களித்தனர். 4 ஓட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. கோத்தபய பதவிக் காலமான 2024 வரை ரணில் விக்ரமசிங்கே இலங்கை அதிபராக பதவியில் நீடிப்பார்.

Tags:
Next Story
Share it