இயற்கை பேரழிவுகளின் போது மனித உயிர்களை காக்க எலி படை !!

இயற்கை பேரழிவுகளின் போது மனித உயிர்களை காக்க எலி படை !!

இயற்கை பேரழிவுகளின் போது மனித உயிர்களை காக்க எலி படை !!
X

எலி என்றாலே சிலருக்கு பயம். பலருக்கு அலர்ஜி. ஆனால் வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க எலி படை தயார் செய்யப்பட்டு வருகிறது.

இந்த முயற்சியில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர். இந்த சோதனையின் போது சிறிய அளவிலான எலிகள் கட்டட இடிபாடுகளுக்குள் ஒரு சிறிய அளவிலான பையுடன் அனுப்பப்படுகிறது. இதனை முதுகுப் பை என (பேக்) என அழைக்கின்றனர். அதனுடன் மைக் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த மைக்கின் உதவியால் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களிடம் நம்மால் பேச இயலும்.

இதுவரை 7 எலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த எலிகளுக்கு வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதுகுப் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சோதனை முயற்சியாக இந்த எலிகள் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட இடிபாடுகளுக்குள் அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டது. மைக் மட்டுமில்லாது சில சென்சார்ஸ் கூட பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் உண்மையில் நிலநடுக்கம் ஏற்படும் போது இந்த சென்சார்கள் பெரிதும் உதவியாக இருக்கும்.

dd

இது குறித்த சோதனையில் இறங்கியுள்ள ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டாக்டர் டோன்னா கீன் கூறியதாவது, எலிகள் சுத்தமற்றவை என்பது நமது தவறான புரிதல். எலிகள் மனிதர்களுடன் எளிதில் பழகும் திறன் கொண்டவை. எலிகளால் இடிபாடுகளுக்குள் சுலபமாக செல்ல முடியும். நாங்கள் சோதனை முயற்சியை செய்து முடித்துள்ளோம்.

இருப்பினும், இந்த பயிற்சி பெற்ற எலிகள் உண்மையான நிலநடுக்க இடிபாடுகளுக்குள் அனுப்பி இன்னும் சோதிக்கப்படவில்லை. இடிபாடுகளுக்குள் செல்லும் எலியின் முதுகுப் பையில் உள்ள ஒலி வாங்கியின் உதவியால் எங்களால் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களிடம் பேச முடியும். 170 எலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவை நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் நாடான துருக்கிக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவித்தார்.


newstm.in


Tags:
Next Story
Share it