நான் அம்மணமா நடிச்சா உனக்கென்ன..?: பயில்வானுடன் மல்லுகட்டிய ரேகா நாயர்..!

நான் அம்மணமா நடிச்சா உனக்கென்ன..?: பயில்வானுடன் மல்லுகட்டிய ரேகா நாயர்..!

நான் அம்மணமா நடிச்சா உனக்கென்ன..?: பயில்வானுடன் மல்லுகட்டிய ரேகா நாயர்..!
X

‘இரவின் நிழல்’ திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்த தன்னை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாகக் கூறி, நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பயில்வான் ரங்கநாதனுடன் நடிகை ரேகா நாயர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. சிங்கிள் ஷாட்டில் தயாராகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், பிரிகிடா, ரேகா நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் என்று பார்த்திபன் இதற்கு விளம்பரம் செய்து வரும் நிலையில், அது தவறான தகவல் என்று விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், இந்தப் படத்தில் குழந்தைக்கு பால் கொடுக்கும் காட்சியில் ரேகா நாயர் தனது மேலாடை விலகும்படி நடித்துள்ளார். இதை, நடிகரும், திரைப்பட விமர்சகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ரேகா நாயர், திருவான்மியூர் பீச்சில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பயில்வான் ரங்கநாதனை நிறுத்தி “நான் எப்படி வேணும்னாலும் நடிப்பேன், உனக்கு என்ன..?. ஆடை இல்லாமல் நடிப்பது என் விருப்பம். அதுல உனக்கு என்ன வந்தது..?.

நீ என்ன என் புருஷனா..?. செருப்பு பிஞ்சுரும்” என ஆவேசமாக கத்தி சண்டை போட்டார். இதனால், இருவருக்கும் இடையே கைகலப்பு உண்டாகும் சூழல் ஏற்பட்டது. இதைக் கண்ட அங்கிருந்தவர்கள், அவர்களை சமாதானம் செய்தனர்.

Tags:
Next Story
Share it