தணிந்த பதற்றம்.. அவசர நிலையை வாபஸ் வாங்கிய இலங்கை அரசு !!
தணிந்த பதற்றம்.. அவசர நிலையை வாபஸ் வாங்கிய இலங்கை அரசு !!

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அதனால் பெரும் பாதிப்பை, கலவரத்தை சந்தித்த முதல் நாடு இலங்கை. அங்கு பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.
குறிப்பாக, இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாததால், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் மின் விநியோகம் பாதித்தது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. பொருட்களின் விலை உச்சத்தை தொட்டது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தன. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை. மருந்து பொருட்கள், உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
சில உணவுப்பொருட்கள் கிடைத்தாலும் அதனை விலையோ விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டதால், மக்களின் தொடர் போராட்டத்தால் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். இதையடுத்து, அரசு ஆதரவாளர்களுக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே வெடித்த மோதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால், இலங்கை முழுவதும் வன்முறை பரவிய நிலையில், கடந்த 6 ஆம் தேதி நாட்டில் அவசர நிலை பிறப்பித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இதையடுத்து, இலங்கையில், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசு அமைந்தது. தொடர்ந்து இலங்கையில் வன்முறை தணிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதையடுத்து, இலங்கையில் அவசர நிலை திரும்பப்பெறப்பட்டுள்ளது. அவசர நிலை சட்டமானது மக்களை தன்னிச்சையாக கைது செய்து தடுத்து வைக்கும் அதிகாரத்தை பாதுகாப்பு படையினருக்கு வழங்குகிறது.
newstm.in