இங்கிலாந்து பிரதமராகிறார் இந்திய வம்சாவளி ரிஷி !!

இங்கிலாந்து பிரதமராகிறார் இந்திய வம்சாவளி ரிஷி !!

இங்கிலாந்து பிரதமராகிறார் இந்திய வம்சாவளி ரிஷி !!
X

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து விலகுகிறார். இவர் பதவியில் இருந்த காலத்தில் சில நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்தாலும், எல்லா விவகாரங்களிலும் போரிஸ் ஜான்சன் சர்ச்சையில் சிக்கினார். இதனால் இவரது ஆட்சி முறை விமர்சனத்துக்கு உள்ளானது.

குறிப்பாக, கொரோனா தொற்றை சரிவர கையாளாதது, கொரோனா காலத்தில் பார்ட்டி கொண்டாடியது, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசு துணைத் தலைமைக் கொறடா கிறிஸ் பின்சர் மீது தாமதமாக நடவடிக்கை என்று போன்ற சர்ச்சைகள் அடுத்தடுத்து வரிசைக்கட்டி நின்றது. இதனால் அதிகாரிகள், அமைச்சர்கள் இருவர் அடுத்தடுத்து பதவி விலகியதால் நெருக்கடி ஏற்பட்டது.

rishi sunak

இந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். இருவர் பதவி விலகியபோதும் அசராத இவர், தமது தலைமையிலான அமைச்சரவையில் இருந்து அடுத்தடுத்து 40 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவி விலகுவதாக அறிவித்தது தான் அவர் இந்த முடிவை எடுக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இதனால் பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இதில் ரிஷி சுனக் என்ற இந்திய வம்சாவளி நபரின் பெயர் முதல்வரிசையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியரும், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக்குக்கு தான் அடுத்த பிரதமராக அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
rishi sunak
போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சியில் நிதி துறை அமைச்சராக இருந்த இவர், அண்மையில் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கொரோனா காலத்தில் பல்வேறு வரிகளை உயர்த்தியது. இவரது மனைவியும், பிரிட்டன் தொழிலதிபருமான அக்சதா மூர்த்தி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது என்று ரிஷி சுனக் மீது பல்வேறு விமர்சனங்கள் அண்மையில் எழுந்தபோதும், தற்போதைய அரசியல் சூழலில் பிரிட்டன் பிரதமராக அவருக்கு பிரகாசமான வாய்ப்புள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.


newstm.in

Tags:
Next Story
Share it