குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் கிடைக்கும்.. மத்திய அரசின் அசத்தலான திட்டம் !!
குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் கிடைக்கும்.. மத்திய அரசின் அசத்தலான திட்டம் !!

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வரையில் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பிரச்சனைக்குப் பிறகு நிறைய குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து தவிக்கின்றனர். ஏழ்மையான குடும்பத்தில் தந்தை அல்லது தாயை கொரோனாவால் இழந்துவிட்டும் குழந்தைகள் பலர் தவித்து வருகின்றனர். இதுபோன்ற குழந்தைகளுக்கு ஆதரவு வழங்குவதற்காக கடந்த 2021 மே மாதம் பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ரன் என்ற திட்டத்தை மத்திய மோடி அரசு கொண்டுவந்தது.

இத்திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு சுகாதார ரீதியாகவும், கல்வி போன்ற விஷயங்களுக்காகவும் அரசு தரப்பில் நிதி உதவி வழங்கப்படுகிறது. குழந்தையின் 18 வயது வரையில் ஒவ்வொரு மாதமும் நிதியுதவி வழங்கப்படும். குழந்தைக்கு 23 வயது ஆகும்போது ரூ.10 லட்சம் நிதியுதவி கிடைக்கும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் குழந்தையின் 18 வயது வரை ரூ.5 லட்சம் காப்பீட்டு உதவியும் கிடைக்கும்.
மத்திய அரசின் இந்தத் திட்டம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வியை வழங்குகிறது. கல்விக்கான செலவை அரசே ஏற்கும். உயர் கல்விக்கு கடனுதவியும் வழங்கப்படுகிறது. இந்தக் கடனுக்கான வட்டிப் பணம் பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து வழங்கப்பட்டுவிடும். 11 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் சைனிக் பள்ளி அல்லது நவோதயா வித்யாலயா பள்ளிகளில் அரசு தரப்பில் சேர்த்துவிடப்படுவர்.

குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டம் 2021 டிசம்பர் 31ஆம் தேதி வரையில்தான் அமலில் இருந்தது. இந்நிலையில் அத்திட்டம் பிப்ரவரி 28ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
newstm.in

