மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 அட்வான்ஸ்!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 அட்வான்ஸ்!!

அரசு ஊழியர்களுக்கு வட்டியில்லா அட்வான்ஸ் தொகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் நிலையில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 10000 ரூபாய் அட்வான்ஸ் தொகை வழங்குவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், இந்த 10000 ரூபாய் அட்வான்ஸ் பணத்துக்கு வட்டி கிடையாது.
பணவீக்கத்தால் உருவாகியுள்ள நெருக்கடியான சூழலை சமாளிக்க இந்த அட்வான்ஸ் தொகை பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் ஏற்கெனவே 2020ஆம் ஆண்டில் பண்டிகைக் கால அட்வான்ஸ் தொகையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அப்போது அரசு ஊழியர்கள் தங்கள் விருப்பமான பண்டிகைக்கு 10,000 ரூபாய் அட்வான்ஸ் பெறலாம்.
இதே திட்டத்தை மீண்டும் அறிவிக்க அரசு பரிசீலித்து வருகிறது. இதன்படி மார்ச் மாதம் ஹோலி பண்டிகைக்கு முன்பாக அட்வான்ஸ் பற்றி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அட்வான்ஸ் தொகையை அதிகபட்சம் 10 தவணைகளில் திருப்பிச் செலுத்திவிட வேண்டும்.
newstm.in

