கட்டிப்பிடி வைத்தியத்திற்கு ரூ.7,100 கட்டணம்... தொழிலாகவே மாற்றிய இளைஞர் !!
கட்டிப்பிடி வைத்தியத்திற்கு ரூ.7,100 கட்டணம்... தொழிலாகவே மாற்றிய இளைஞர் !!

ஒருவரையருவர் கட்டி அணைப்பதன் மூலம் அவர்களின் மன அழுத்தம் குறைந்து மனதில் தைரியம் பிறக்கும், அமைதி பெறும். இந்தக் கட்டிப்புடி வைத்தியம் என்பது பல காலமாக இருப்பது தான். ஆனால் இது பெரியளவில் நடைமுறையில் இல்லாத ஒன்று என்றாலும் பெரும்பாலானோர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் வசூல்ராஜா MBBS படத்தில் நடிகர் கமல்ஹாசன் கமல்ஹாசன், கட்டிப்புடி வைத்தியம் என்ற விஷயத்தைத் பிரபலமாக்கினார். அது வெற்றியையும் கொடுத்தது.
மன அழுத்தம், டென்ஷனாக இருப்பவர்களுக்கு மற்றவர்கள் கட்டிப்பிடிப்பது மூலம் மன அழுத்தம் குறையும் என்பது தான் இந்தக் கட்டிப்பிடி வைத்தியத்தின் அடிப்படை. ஆனால் இந்த விஷயம் தற்போது உலகில் பல நாடுகளில் பரவி, தற்போது முக்கிய வர்த்தகமாகவே மாறியுள்ளது தற்போதைய ஹாட் செய்தி.
தற்போது தெற்காசிய நாடுகளில் மசாஜ், ஸ்பா போன்று கட்டிப்புடி வைத்தியமும் முக்கியமான சேவையாக மாறியுள்ளது. இதைப் பல விமர்சனம் செய்தாலும், பலர் இதன் மூலம் அதிகளவிலான நன்மை அடைவதாகக் கூறுகின்றனர். இது சரியா தவறா என்பதைத் தாண்டி, தற்போது இது ப்ரொபஷனல் சேவையாக மாறியுள்ளது வியக்க வைக்கிறது. குறிப்பாக பிரிட்டன் நாட்டின் முக்கிய வர்த்தகமாகவே மாறியுள்ளது.
பிரிட்டன் ஒருவரின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் வேளையில் பலர் விநோதமாக விஷயங்கள் மூலம் பணம் சம்பாதிக்கத் துவங்கியுள்ளனர். அதாவது, மனைவி தன் கணவனை வீட்டுவேலை செய்ய வாடகைக்கு விட்ட செய்தி பெரிய அளவில் பிரபலமானது.
பிரிட்டனில் வசித்து வரும் கனடாவைச் சேர்ந்த ட்ரெவர் ஹூடன் என்பவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் Embrace Connections என்ற கட்டிப்புடி சேவையை வழங்கும் நிறுவனத்தைத் தொடங்கினார். இது வாடிக்கையாளர்களுக்குக் கட்டிப்புடி சிகிச்சை, இணைப்புப் பயிற்சி மற்றும் மசாஜ்களை வழங்குகிறது.
கட்டிப்புடி சிகிச்சை பல வகையில் மக்களின் மன வாழ்வை மேம்படுத்துவதாகக் கூறுகிறது Embrace Connections.
Embrace Connections நிறுவனம் ஒரு செஷன் கட்டிப்புடி வைத்தியத்திற்குச் சுமார் 75 பவுண்டு வசூல் செய்கிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7100 ரூபாய் ஆகும். இதில் இளைஞர்கள், இளம்பெண்கள், வயதானவர்கள் என பலரும் அந்த இளைஞரின் நிறுவனத்துக்கு சென்று கட்டிப்புடி வைத்தியம் மூலம் சிகிச்சை பெறுகின்றனர். இதன்மூலம் பெரும் பலன்பெறுவதாகவும் இருந்த மனஇருக்கம் நீங்கியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து ட்ரெவர் ஹூடன் கூறும்போது, கட்டி அணைப்பதையும தாண்டி ஒருவருக்கு அன்பு, பாசம், அக்கறையும் நான் கொடுத்து வருகிறேன். மேலும் இதை எல்லோராலும் சாதாரணமாக செய்து விட முடியாது. என்னை சிலர் நேரடியாகவே செக்ஸ் வொர்க்கர் என்று கூறி ஏளனம் செய்தார்கள். இருப்பினும் நான் மனளம் தளர்ந்து போகவில்லை. மனித உறவுகளை பலப்படுத்தவும், உருவாக்குவதற்குமான எனது ஆர்வத்தினை ஒரு தொழிலாக மாற்றி இருக்கிறேன். இதன் மூலம் என்னை நாடி வருபவர்களுக்கு தேவையானவற்றை கொடுப்பதில் நான் மனநிறைவு அடைகிறேன், என்று தெரிவித்துள்ளார்.
newstm.in