ரஷ்ய அதிபர் புதினுக்கு ரத்தப் புற்றுநோய்? - கசியும் ரகசியங்கள் !!
ரஷ்ய அதிபர் புதினுக்கு ரத்தப் புற்றுநோய்? - கசியும் ரகசியங்கள் !!

ரஷ்யா தாக்குதலால் உக்ரைன் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. உக்ரைனின் பெரும் நகரங்களில் உள்ள பெரும்பாலான கட்டிடங்களை ரஷ்யா தரைமட்டமாக்கியது. இதனால் மக்கள் வாழ தகுதியற்ற நகரமாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறிவிட்டனர்.
பல கோரங்கள் நடந்த பிறகும் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்தவில்லை. இந்த நிலையில் பரபரப்பான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாது, ரஷ்ய அதிபர் பதவியிலிருந்து விளாதிமிர் புதினைக் கவிழ்ப்பதற்கான சதி ஏற்கனவே நடந்து கொண்டிருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் போரில் ரஷ்யா தோற்கும் என்றும் உக்ரைனின் உளவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். மேஜர் ஜெனரல் கைரைலோ புதனோவ் கூறியதாக டெய்லி மெயில் வெளியிட்டிருக்கும் செய்தியில், உக்ரைன் - ரஷ்ய போரில் இந்த கோடைக்குள் ஒரு திருப்புமுனை உருவாகும். விரைவில் ரஷ்ய அதிபர் அலுவலகத்திலிருந்து புதின் வெளியேற்றப்படுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாத இரண்டாம் பாதியில் ஒருமிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும். தீவிரமா போர் இந்த ஆண்டு இறுதியில் முடிவுக்கு வரும். இதன் தொடர்ச்சியாக ரஷ்ய அதிபர் பதவியிலும் மாற்றம் ஏற்படும். அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன என்றும், ரஷ்யாவில் இயங்கும் அமைப்பு ஒன்று, புடின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாகவும், அவர் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருப்பதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
ரத்த புற்றுநோயால் புதினுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டு, அதனால் அவதிப்பட்டு வருவதாக கிரெம்லினுடன் நெருங்கிய தொடர்பிலிருக்கும் தன்னார்வல அமைப்பு தெரிவித்திருப்பதாக இவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு துவக்கம் முதலே புதினின் உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. வழக்கமான முகம் சற்று பெரிதாகக் காணப்பட்டதால், அவரது உடல் நலக்குறைவுக்கு ஸ்டீராய்ட் வகை மருந்து எதையோ எடுத்துக் கொள்வது காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் உக்ரைனில் இருந்து இப்படியொரு தகவல் வெளிவந்துள்ளது.
newstm.in