ஸ்கூட்டியின் விலை ரூ.8 லட்சம்.. கார் விலையைகேட்டு மயக்கமடைந்த மக்கள் !!
ஸ்கூட்டியின் விலை ரூ.8 லட்சம்.. கார் விலையைகேட்டு மயக்கமடைந்த மக்கள் !!

இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்சனை என்பது பல மாதங்களாக நீடித்து வருகிறது. மக்கள் உணவுப்பொருட்கள், மருந்துபொருட்கள், எரிவாயு, பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். கிடைத்தாலும் அதன் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அப்போது வெடித்த வன்முறையால் இலங்கையே பற்றி எரிந்தது தனிகதை. இந்த நிலையில் தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாகனங்கள் விலை உயர்ந்துள்ளது. இலங்கையில் சாதாரண ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிளின் விலை தற்போது ரூ. 8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
முன்னணி கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி அங்கு புதிய வாகனங்களுக்கு பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு 3 லட்சத்திற்கு விற்கப்பட்ட மோட்டார் சைக்கிள் தற்போது ரூ. 8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் முன்னணி கார்களின் விலையும் 60 முதல் 90 லட்சம் வரை விலை அதிகரித்துள்ளது. வாகன இறக்குமதி குறைவால் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பண வீக்கமும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனிடையே, இருசக்கர வாகனம் மற்றும் கார்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அந்நாட்டு மக்கள் பைக், கார் வாங்க தற்போது ஆர்வம் காட்டவில்லை என்பதால் இதுவும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in