தகிக்கும் வெப்பம்... மக்கள் வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கை !!

தகிக்கும் வெப்பம்... மக்கள் வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கை !!

தகிக்கும் வெப்பம்... மக்கள் வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கை !!
X

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் உணரப்படுகிறது. பருவம் தவறிய மழை, வெயில் தாக்குகிறது. இதனால் இயற்கை சீற்றங்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் வரும் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் மிக அதிக வெப்பநிலை பதிவாகும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின சில பகுதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

gfdg

இதனால் பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. மேலும், நகர்புறங்களில் இரவு நேரத்தில் அதிக அளவு வெப்பம் நிலவும் எனவும் எச்சரித்துள்ளது. இதனையடுத்து, அதிக வெப்பநிலை காரணமாக திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

fdg

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவில் கடந்த 2019-ம் ஆண்டு அதிகப்படியாக 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it