முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சிலை முன்பு சுயமரியாதை திருமணம்!!
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சிலை முன்பு சுயமரியாதை திருமணம்!!

மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் உருவச்சிலை முன்பாக கடந்த ஜூன் 3 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 99வது பிறந்த நாளன்று மணிகண்டன் மற்றும் பிரியா ஜோடி சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.
இது குறித்து இளம்தம்பதியர் கூறும்போது, ‘‘மறைந்த முன்னாள் முதல்வரும் முத்தமிழ் அறிஞருமான கலைஞர் திருவுருவச் சிலை முன்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்டதை பெரிய பாக்கியமாக கருதுகிறோம். இந்த நாளை எங்கள் வாழ்வில் நினைவுகூர நன்னாளாக இருக்கும் என்று கருதுகிறோம் என்று கூறினர்.கலைஞர் சிலை முன்பு மணிகண்டன், பிரியா தம்பதியர் மணக்கோலத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
Next Story

