ரயில்களில் குழந்தைகளுக்கு தனி படுக்கை.. வைகோ கேள்வி.. அமைச்சர் பதில்..!

ரயில்களில் குழந்தைகளுக்கு தனி படுக்கை.. வைகோ கேள்வி.. அமைச்சர் பதில்..!

ரயில்களில் குழந்தைகளுக்கு தனி படுக்கை.. வைகோ கேள்வி.. அமைச்சர் பதில்..!
X

“நீண்ட தூர ரயில்களில் குழந்தைகளுக்கு தனி படுக்கை வசதி உள்ளதா..?” என வைகோ எழுப்பிய கேள்விக்கு, ‘லக்னோ மெயில் ரயில் பெட்டியில் மட்டும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது’ என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

மாநிலங்களவையில் பேசிய மதிமுக எம்பி வைகோ, “தொலைதூர ரயில்களில் குழந்தைகளுக்கான தனி இருக்கைகள், படுக்கைகளை ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளதா..?; இந்த வசதி அனைத்து ரயில்களிலும் அறிமுகப்படுத்தப்படுமா..?; இதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமா, அல்லது இலவசமாக வழங்கப்படுமா..?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு, மத்திய ரயில்வே இணை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில், “தங்கள் குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெண்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், சோதனை அடிப்படையில் லக்னோ மெயில் ரயில் பெட்டியில் இரண்டு கீழ் படுக்கைகளுடன், இரண்டு குழந்தைகள் படுக்கைகளும் இணைக்கப்பட்டுள்ளன. தற்சமயம் சோதனை அடிப்படையில், ஒரு ரயில் பெட்டியில் மட்டும் வசதி செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

Next Story
Share it