அதிர்ச்சி! டீசல் திருடர்களை சுட்டுப்பிடித்த போலீஸ்!!
அதிர்ச்சி! டீசல் திருடர்களை சுட்டுப்பிடித்த போலீஸ்!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆனைக்கல் பகுதியில் அதிக அளவில் சரக்கு வாகனங்களில் டீசல் திருட்டு நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகாரில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்தினர்.
இந்நிலையில் டி.எல்.எஃப் தொழிற்சாலை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் இருந்து ஒரு நபர் டீசல் திருடுவதையும் அதற்கு காவலுக்கு சிலர் இருந்ததையும் போலீஸார் பார்த்தனர்.
உடனடியாக அந்த நபர்களை சரணடைய போலீஸார் அறிவுறுத்திய நிலையில் டீசல் திருடர்கள் திடீரென தங்களிடம் இருந்த ஆயுந்தங்களை கொண்டு போலீஸாரை தாக்கியுள்ளனர்.

இதில் சில போலீஸார் காயமடைந்ததை அடுத்து டீசல் திருடர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சீனிவாஸ் என்ற நபர் கீழே விழுந்தார். மற்ற நபர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இதனையடுத்து துப்பாக்கி குண்டு பாய்ந்த நபரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து ஒரு கார் மற்றும் டீசல் நிரப்பிய ஏராளமான கேன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

