அதிர்ச்சி! பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியை ஆடையை கிழித்த கும்பல்!!
அதிர்ச்சி! பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியை ஆடையை கிழித்த கும்பல்!!

வகுப்புக்கு வராத மாணவியை அடித்த ஆசிரியரின் ஆடைகளை கிழத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த வியாழனன்று வகுப்புக்கு வராமல் இருந்துள்ளார். பின்னர் அந்த மாணவி அடுத்தநாள் வகுப்புக்கு வந்துள்ளார்.
அப்போது அந்த மாணவியை அப்பள்ளி ஆசிரியை கன்னத்தில் அறைந்துள்ளார். இது குறித்துச் சம்மந்தப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து மாணவியைத் தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது உறவினர்கள் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு திடீரென அவர்கள் பள்ளிக்குள் நுழைந்து மாணவியை அடித்த ஆசிரியை மீது தாக்குதல் நடத்தினர்.
மேலும் அவரது ஆடைகளையும் கிழித்தனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி சமாதானப் படுத்தினர். பின்னர் பள்ளி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
A teacher upon scolding a Muslim student was brutally assaulted by the parents of that child & others. A teacher was stripped naked & beaten up badly. Inspite of specific complaint Hili Police Station, South Dinajpur police didn't arrest anyone. @WBPolice please take steps. pic.twitter.com/Po8Yh3UhZL
— Tarunjyoti Tewari (@tjt4002) July 24, 2022
தற்போது ஆசிரியை தாக்கப்படும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து மேற்குவங்கத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
newstm.in