அதிர்ச்சி.. அனாதையாக கிடக்கும் பழம்பெரும் நடிகரின் உடல்..!

அதிர்ச்சி.. அனாதையாக கிடக்கும் பழம்பெரும் நடிகரின் உடல்..!

அதிர்ச்சி.. அனாதையாக கிடக்கும் பழம்பெரும் நடிகரின் உடல்..!
X

திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ராஜ்மோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 80.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ்மோகன். இவர், 1967-ம் ஆண்டு வெளியான ‘இந்துலேகா’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதையடுத்து சில படங்களில், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பின்னர், மனைவியுடன் விவாகரத்து ஏற்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி இருந்தார். இந்த நிலையில், இவருக்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ராஜ்மோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவருடைய மரணம் குறித்து உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ராஜ்மோகன் உடலை யாரும் வாங்க முன்வரவில்லை.

இதனைத் தொடர்ந்து, நடிகர் ராஜ்மோகன் உடலை அரசு சார்பில் தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Next Story
Share it