Theme Check

மன்னிப்பா, ரூ.100 கோடி நஷ்டஈடா..?: அண்ணாமலையிடம் கேட்கிறார் ஆர்.எஸ்.பாரதி..!

மன்னிப்பா, ரூ.100 கோடி நஷ்டஈடா..?: அண்ணாமலையிடம் கேட்கிறார் ஆர்.எஸ்.பாரதி..!

மன்னிப்பா, ரூ.100 கோடி நஷ்டஈடா..?: அண்ணாமலையிடம் கேட்கிறார் ஆர்.எஸ்.பாரதி..!
X

விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சமீபத்தில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, “முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய்க்கு தனியே செல்லவில்லை; அவருடன் ஒரு பட்டாளமே சென்றுள்ளது.

முதல்வரின் துபாய் பயணத்தையொட்டி ரூ.5 ஆயிரம் கோடி அங்கு பறந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. துபாயில் நடைபெறும் விழாவில் தமிழகம் சார்பிலான அரங்கை திறந்து வைக்க எதற்கு அவ்வளவு பணம்..?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தை விமர்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் துபாய் பயணத்தை, சொந்த பணத்தை முதலீடு செய்ய சென்றிருப்பதாக கூறுகிறார் அண்ணாமலை.

முதலமைச்சரை விமர்சித்த அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவரிடம் 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.

நோட்டீஸ் அனுப்பிய 24 மணிநேரத்திற்குள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு தொடரப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story
Share it