#BIG BREAKING:- பெரும்பான்மையை இழக்கிறது இலங்கை அரசு..!
#BIG BREAKING:- பெரும்பான்மையை இழக்கிறது இலங்கை அரசு..!

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்த நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதால் பிரதமர் மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், அமைச்சரவை கலைக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுடன் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது.
நாடாளுமன்றம் கூடிய போது, பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை கூட்டணிக் கட்சிகள் விலக்கிக்கொண்டன.
225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ராஜபக்சே தலைமையிலான அரசுக்கு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 145 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது.
ஆனால், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை சுதந்திர கட்சி உள்ளிட்ட கட்சிகள் அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றன. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 43-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆளுங்கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர்.
ஆளும் எஸ்.எல்.பி.பி. கட்சிக்கு வழங்கிய ஆதரவை கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாக வாபஸ் பெறுகின்றன. இதனால், நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசின் பலம் 102 உறுப்பினர்கள் ஆக குறைத்துள்ளது. இதன் மூலம் மகிந்த ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
அதேவேளை, அரசு பெரும்பான்மையை இழந்தபோதிலும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கே அதிக அதிகாரம் உள்ளதால் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மேலும் சில நாட்கள் ஆகலாம்.
அப்படி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு அப்போது நடைபெறும் வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் மகிந்த ராஜபக்ச அரசு கவிழும்.