முதல் நாளிலேயே ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக திரும்பிய இலங்கை மக்கள்

முதல் நாளிலேயே ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக திரும்பிய இலங்கை மக்கள்

முதல் நாளிலேயே ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக திரும்பிய இலங்கை மக்கள்
X

இலங்கை தலைநகர் கொழும்பில் புதிய அதிபர் ரணில் விக்கிரசிங்கவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் போராட்டம் வெடித்தது. மக்கள் அமைதியான முறையில் போராடினாலும் அவ்வப்போது வன்முறை ஏற்படுகிறது. இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபட்ச அண்மையில் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றாா்.

ranil wikramsinge

இதனைத் தொடர்ந்து புதிய அதிபருக்கான தேர்தலில், இடைக்கால அதிபரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தி எம்.பி. டலஸ் அழகம்பெரும, ஜனதா விமுக்தி பெரமுன தலைவா் அனுர குமார ஆகிய 3 போ் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடாளுமன்றத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் மொத்தம் பதிவான 223 வாக்குகளில் 4 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதிகபட்சமாக ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகள் பெற்றதால் அவர் அதிபராக தேர்தெடுக்கப்பட்டார்.

ranil wikramsinge

கோத்தபய ராஜபட்சவின் பதவிக்காலமான நவம்பர் 2024 வரை ரணில் அதிபராக தொடர்ந்து செயல்படுவார். இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை முன் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிபராக பதவியேற்றதும் அவருக்கு எதிராக மக்கள் போராடத்தொடங்கியதால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவிடம் நாட்டை மீட்க எவ்வித திட்டமும் இல்லை. பிரதமராக இருந்தபோதே எதுவும் செய்யாமல் அலட்சியம் காட்டியதாகவும் புகார் கூறுகின்றனர். எனவே அவருக்கு எதிராக மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it