பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் பறிமுதல்.. பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது..!
பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் பறிமுதல்.. பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது..!

ராமநாதபுரம் மாவட்டத்தில், கால்வாயில் மறைத்து வைக்கப்பட்ட பல கோடி மதிப்புடைய 2 நடராஜர், நாக கன்னி, காளி, முருகன், விநாயகர், நாக தேவதை ஆகிய 7 உலோக சிலைகளை, சிலைகள் கடத்தல் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சிலைகளை கடத்திய வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் பாஜக சிறுபான்மை அணி செயலாளர் அலெக்சாண்டர், இரண்டு காவலர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 7 சிலைகளையும் ரூ.5 கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற இரு காவலர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அருப்புக்கோட்டையை சேர்ந்த காவலர் இளங்குமரன், திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் நாகநரேந்திரன் ஆகியோரை சிலைகள் கடத்தல் பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிலைகளை பறிமுதல் செய்தனர். இதில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரும் சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கில் மேலும் இரண்டு பேர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை தேடக்கூடிய பணியும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு எனக்கூறி அலெக்சாண்டர் மூலம் ரூ.5 கோடிக்கு சிலைகளை விற்க முயன்றது தெரியவந்துள்ளது.
அலெக்சாண்டரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் 2 காவலர்கள் உட்பட 3 பேர் சிக்கினர். கைதானவர்கள் அளித்த தகவலின் படி ராமநாதபுரத்தில் மறைத்து வைத்திருந்த 7 சுவாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

