விவசாயிகளுக்கு அசத்தல் திட்டம்.. டிராக்டர் வாங்க மானியம் கிடைக்கும் !!
விவசாயிகளுக்கு அசத்தல் திட்டம்.. டிராக்டர் வாங்க மானியம் கிடைக்கும் !!

இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கு நிதியுதவி வழங்கவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுபோன்ற நிறைய திட்டங்கள் உள்ளன.
எனினும், விவசாயம் செய்ய எந்திரங்கள் தேவை. குறிப்பாக, அறுவடை போன்ற விஷயங்களுக்கு டிராக்டர் அவசியம். இந்த விஷயத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு டிராக்டர் வாங்க மானியம் வழங்குகிறது. 'பிஎம் கிசான் டிராக்டர் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் இந்த மானிய உதவி வழங்கப்படுகிறது.

பிஎம் கிசான் டிராக்டர் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பாதி விலையில் டிராக்டர்கள் கிடைக்கின்றன. இந்தத் திட்டத்தின் மூலமாக விவசாயிகள் எந்த நிறுவனத்தின் டிராக்டரையும் பாதி விலைக்கு வாங்க முடியும். எஞ்சிய தொகையை மத்திய அரசே வழங்குகிறது. மத்திய அரசு மட்டுமல்லாமல், மாநில அரசுகளும் டிராக்டர் வாங்க மானிய உதவி வழங்குகின்றன. இதனால் விவசாயிகள் தங்களது வேளாண் தொழிலைச் சிறப்பாக நடத்தவும், வருவாய் ஈட்டவும் முடிகிறது. எனவே இத்திட்டம் விவசாயிகளுடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு 18 முதல் 60 வயது வரையில் இருக்கும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும். டிராக்டர் வாங்குபவரின் பெயரில் சொந்தமாக விவசாய நிலம் இருக்க வேண்டும். மற்ற மானிய திட்டங்களில் உதவி பெற்றிருக்கக் கூடாது. முக்கியமான நிபந்தனை என்னவென்றால், விண்ணப்பதாரர் கடந்த ஏழு ஆண்டுகளில் இதேபோல டிராக்டர் எதையும் வாங்கியிருக்கக் கூடாது. ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே டிராக்டருக்கு மானிய உதவி பெற விண்ணப்பிக்க முடியும்.
newstm.in

