தொடரும் அவலம்..!! மீண்டும் ஒரு +2 மாணவி தற்கொலை..!!

தொடரும் அவலம்..!! மீண்டும் ஒரு +2 மாணவி தற்கொலை..!!

தொடரும் அவலம்..!! மீண்டும் ஒரு +2 மாணவி தற்கொலை..!!
X

திருவள்ளுவர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வருபவர் திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசனம், முருகம்மாள் தம்பதியின் மகள் சரளா (17).

இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. பின் சக நண்பர்கள் உணவு அருந்த சென்றபோது தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் சந்திர தாசன், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவி தற்கொலை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, திருவள்ளூர் வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறையினர் போலீசார் விடுதி காப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் இடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அசம்பாவித நிகழ்வுகளை தவிர்ப்பதற்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story
Share it