Theme Check

சூப்பர் அறிவிப்பு! கொரோனா பூஸ்டர் டோஸ் இலவசம்!!

சூப்பர் அறிவிப்பு! கொரோனா பூஸ்டர் டோஸ் இலவசம்!!

சூப்பர் அறிவிப்பு! கொரோனா பூஸ்டர் டோஸ் இலவசம்!!
X

18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை ஜூலை 15ஆம் தேதி முதல் இலவசமாக செலுத்திக்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2020ாம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பின்னர் தனிமனித இடைவெளி, ஊரடங்கு மூலம் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.

கொரோனா தடுப்பூசி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூலம் இந்தியாவில் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி காரணமாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியது.

vaccine

எனினும் புதிது புதிதாக திரிபு அடைந்து கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் என்பது மெல்ல அதிகரித்து காணப்படுகிறது.

கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள முதலில் 2 தவணையாக தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் தேவைப்படுவோருக்கு பூஸ்டர் டோஸும் போடப்பட்டு வருகிறது.

vaccine

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் மாநில அரசுகள் தடுப்பூசி போடும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், ‘18-59 வயதுக்குட்பட்டவர்கள் 75 நாள் சிறப்பு இயக்கத்தின் கீழ் இலவசமாக கொரோனா தடுப்பு பூஸ்டர் டோஸ் போடப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜூலை 15ஆம் தேதி தொடங்கி 75 நாள் பொதுமக்கள் இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என தெரிகிறது.

newstm.in

Next Story
Share it