Theme Check

பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகம்... இளைஞர் எரித்து கொலை!!

பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகம்... இளைஞர் எரித்து கொலை!!

பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகம்... இளைஞர் எரித்து கொலை!!
X

பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபரை பொதுமக்கள் தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் நஹோன் மாவட்டம் போர் லாலுங் கிராமத்தில் சபிதா (35 ) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இரு குழந்தைக்கு தாயான இவரின் கொலை அந்த கிராமத்தையே உலுக்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் 5 இளைஞர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த தகவல் அந்த கிராமத்தினருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பஞ்சாயத்து கூடியது. அதில் அந்த 5 இளைஞர்களையும் அழைத்துவந்த கிராமத்தார் அவர்களிடம் கடுமையாக விசாரணை நடத்தினர்.

abuse

இதில், ரஞ்சித் போர்டோலோய் (30) என்ற இளைஞர்தான் குற்றவாளி என்று தெரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை உயிருடன் எரித்து கொல்லுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக அந்த இளைஞர் நிர்வாணப்படுத்தப்பட்டு, மரத்தில் கட்டி வைக்கப்பட்டார். பின்னர் அவர் உடலில் பெட்ரோலை ஊற்றிய ஊர் மக்கள் தீ வைத்து எரித்தனர். அலறி துடித்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் பஞ்சாயத்து தலைவர்களை தேடி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it