ஒரு நபருக்கு ரூ.2 கோடி கொடுத்தால் தமிழக மீனவர்களுக்கு ஜாமீன்..!!

ஒரு நபருக்கு ரூ.2 கோடி கொடுத்தால் தமிழக மீனவர்களுக்கு ஜாமீன்..!!

ஒரு நபருக்கு ரூ.2 கோடி கொடுத்தால் தமிழக மீனவர்களுக்கு ஜாமீன்..!!
X

கடந்த 23 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி சிறைபிடித்தனர்.

அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களின் வழக்கு இலங்கையில் விசாரணைக்கு வந்த நிலையில், வரும் 12 ஆம் தேதி வரை மீனவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மீனவர்கள் சிறையில் இருந்து வெளியே வர நினைத்தால், அவர்கள் தலா 2 கோடி ரூபாய் கொடுத்தால், அவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதை கேட்டு மீனவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பானம் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு மீனவருக்கும் தலா 2 கோடி ரூபாய் பிணை வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் கூறியிருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:
Next Story
Share it