ஆசிரியர் தகுதி தேர்வு.. விண்ணப்ப திருத்தம் இன்று கடைசி நாள் !
ஆசிரியர் தகுதி தேர்வு.. விண்ணப்ப திருத்தம் இன்று கடைசி நாள் !

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப விபரங்களை ஆன்லைன் மூலம் திருத்தம் செய்வதற்கான அவகாசம் இன்று முடிகிறது.
பள்ளிக் கல்வி துறை சார்பில், ஆசிரியர் தகுதி தேர்வு மார்ச்சில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியில் சேர்வதற்கான, முதல் தாள் தேர்வு, ஆக., 25 முதல் 31 ஆம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 எழுதுவதற்க 2 லட்சத்து 30 ஆயிரத்து 278 பேரும், தாள் 2 எழுதுவதற்கு 4 லட்சத்து 1 ஆயிரத்து 885 பேரும் என மொத்தமாக 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அதேபோல், பட்டதாரி ஆசிரியர் பணிக்கான இரண்டாம் தாளுக்கு தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த தேர்வுகளில் பங்கேற்க விரும்புவோரிடம், ஏப்ரல் 26 வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
விண்ணப்பத்தில் உள்ள விபரங்களில் தவறுகள் உள்ளதாகவும், அவற்றை திருத்தம் செய்ய அவகாசம் தேவை என்றும் கோரிக்கை விடுத்தனர். அதை பரிசீலித்து விண்ணப்ப விபரங்களை ஆன்லைனில் திருத்தும் வசதி கடந்த 24ஆம் தேதி முதல் வழங்கப்பட்டது. இந்த அவகாசம், இன்றுடன் முடிகிறது.
மேலும் திருத்தங்கள் மேற்கொள்ளும்பொழுது கவனமாக செயல்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் விவரங்களைப் புதுப்பித்தவுடன் முன்பக்கத்திலுள்ள சமரப்பி (Sahmit) பொத்தானை அழுத்தி செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
சமர்ப்பி (Submit) பொத்தானை அழுத்தி உறுதி செய்யவில்லை எனில் முந்தைய விவரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் மாற்றங்களைச் செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின் அதில் மேலும் மாற்றங்களைச் செய்யக் கூடாது. எனவே விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முன் மீண்டும் சரிபார்த்துக் கொள்ளவும்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை எனில் முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் செல்போன் எண் (Mobile Number) மின்னஞ்சல் முகவரி (Email ) மற்றும் கல்வித்தருதி ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது. விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வுகளான தாள் 1, தாள் 2 ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்ய இயலாது. இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எந்தவித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது என அதில் கூறியுள்ளார்.
newstm.in