அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம்.. இந்திய இளைஞர் சுட்டுக்கொலை !!
அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம்.. இந்திய இளைஞர் சுட்டுக்கொலை !!

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா பகுதியை சேர்ந்த சாய்சரண் (24), என்ற இளைஞர் அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் தங்கி சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தார். அவருடன் தங்கி வேலை செய்யும் நண்பரை விமான நிலையத்தில் காரில் அழைத்துச் சென்றார்.
பின்னர் அவரை வழி அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் அதேகாரில் வீட்டிற்கு திரும்பிசென்றபோது, அவரது காரை வழிமறித்த 2 மர்மநபர்கள் அவருடன் தகராறு செய்தனர். பின்னர் சாய்சரணின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து சுட்டனர். இதில் தலையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
பட்டப்பகலில் காரில் வந்தவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்வதை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாய்சரனை சுட்டுக்கொன்றவர்கள் யார் எதற்காக சுட்டுக் கொன்றனர். முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தெலுங்கானா என்ஜினியர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in