இந்த மாவட்டத்திற்கு வரும் 3-ம் தேதி விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு..!
இந்த மாவட்டத்திற்கு வரும் 3-ம் தேதி விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு..!

சேலம் மாவட்டத்திற்கு வரும் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு, அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3-ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
அதன்படி, அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது. இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் வராது என்பதால், அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.
இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வருகிற செப்டம்பர் மாதம் 17-ம் தேதி பணி நாளாக செயல்படும்” என்று கூறப்பட்டுள்ளது.