சென்னை விழாக்கோலம்.. செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை விழாக்கோலம்.. செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை விழாக்கோலம்.. செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்
X

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 1927ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்த போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன.

நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற உள்ள வரலாற்று சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்து மோடி உரையாற்றுகிறார். இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

chess

பிரதமர் மோடியின் வருகையையொட்டி விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கு உள்பட பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி தமிழகத்தின் தொன்மை மிகுந்த கருப்பு-வெள்ளை கலாசாரத்தை பிரதிபலிக்கும் கலாசார நிகழ்ச்சிகள் தொடர்பான முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பொய்க்கால் குதிரை ஆட்டம், பறையாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

chess

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 5.25 மணிக்கு புறப்பட்டு ஐ.என்.எஸ். அடையாருக்கு 5.45 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து 5.50 மணிக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டு, விழா நடைபெறும் உள் விளையாட்டு அரங்கத்துக்கு மாலை 6 மணிக்கு வந்தடைகிறார்.

இந்த நிகழ்ச்சியில் இரவு 7.30 மணி வரை பங்கேற்கிறார். விழா முடிந்தவுடன் சாலை மார்க்கமாக புறப்பட்டு கிண்டி கவர்னர் மாளிகைக்கு இரவு 7.50 மணிக்கு சென்றடைகிறார். அப்போது அவரை முக்கிய பிரமுகர்கள் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. இரவு கவர்னர் மாளிகையில் தங்கும் நரேந்திர மோடி, நாளை (வெள்ளிக்கிழமை) அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். இந்த விழாவை முடித்துவிட்டு மதியம் 11.50 மணி அளவில் சென்னையில் இருந்து அவர் புறப்பட்டு செல்கிறார்.

newstm.in

Next Story
Share it