குழந்தை கருப்பா இல்லையே.. அப்போ கொன்னுடுங்க..!

குழந்தை கருப்பா இல்லையே.. அப்போ கொன்னுடுங்க..!

குழந்தை கருப்பா இல்லையே.. அப்போ கொன்னுடுங்க..!
X

இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தெற்கு அந்தமான் மற்றும் நடு அந்தமானில் வசிப்பவர்கள் ஜாரவா பழங்குடியினர். ஜாரவா எனும் சொல்லுக்கு ‘மண்ணின் மைந்தர்கள்’ என்று பொருள்.

அவர்களின் மரபணு சோதனையில், இவர்கள் பசிபிக் தீவைச் சேர்ந்தவர்கள் என்றும், அந்தமான் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தாலும் இந்தியர்களின் மரபணு அவர்களின் உடலில் இல்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Andamans: Viral Islands - Open The Magazine
தொன்மையான பழங்குடிகளாக கருதப்படும் ஜாரவா இனத்தில் தற்போது 380 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். வெளி உலக தொடர்புகள் துளியும் இன்றி தனிமையில் வாழும் ஜாரவா பழங்குடியினர், பன்றி உள்ளிட்ட விலங்குகளையும், கடலில் காணப்படும் மீன்களையும் வேட்டையாடி பசியாறுகின்றனர்.

இந்த பழங்குடியினரிடையே பல விசித்திரமான விஷயங்கள் மிகவும் பரவலாக உள்ளன. பிறக்கும் குழந்தைக்கு கூட மரண தண்டனை விதிப்பது தான் இதில் அதிர்ச்சிகரமானது.

ஒரு குழந்தை அழகாகவோ அல்லது வெள்ளை நிறமாகவோ பிறந்தால் அந்த குழந்தை பிறந்த உடனேயே கொல்லப்படுவார்கள் என்பது அதிர்ச்சி ரகம்.
Andamans: US man's death puts spotlight on 'tribal tourism' - BBC News
இந்த பழங்குடியின மக்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்பதால் கருப்பாக இருப்பார்கள். இதனால், ஒரு பெண்ணுக்கு வெள்ளையாக குழந்தை பிறந்தால் அந்த குழந்தையை ஏற்காமல் கொன்றுவிடுகிறார்கள்.

அவர்களை பொறுத்தவரை, வெள்ளை நிறமான குழந்தை என்பது வேறு சில பழங்குடி அல்லது வேற்றுமையாக கருதுகிறார்கள். இதனால் தான் வெள்ளை நிறத்திலான குழந்தையை கொன்று விடுகிறார்கள்.

இது தவிர, இந்தச் சமூகத்தில் ஒரு குழந்தை பிறக்கும் போதெல்லாம், குலப் பெண்கள் அனைவரும் தாய்ப்பால் கொடுப்பார்கள். இது ஒற்றுமையின் ஆணிவேராக கருதப்படுகிறது.

ஜாரவா பழங்குடியினரில் குழந்தை கருப்பாக இருப்பது மிகவும் முக்கியம். இதற்காக, கர்ப்பிணிக்கு விலங்குகளின் ரத்தம் வழங்கப்படுகிறது. விலங்குகளின் ரத்தத்தை குடித்தால், பிறக்கும் குழந்தையின் நிறம் கருப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

நிறமான குழந்தை பிறந்தால் தந்தையே அக்குழந்தையை கொன்றுவிடுகிறார் என்பது மூட நம்பிக்கையின் உச்சமாக உள்ளது. இது தவிர, எப்போது ஒரு பெண் கணவனை இழக்கிறாரோ, அப்போதே அவருடைய குழந்தை கொல்லப்படுகிறது.

Tags:
Next Story
Share it