இறந்த பிறகு 2 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே கிடந்த பெண் சடலம்!!

இறந்த பிறகு 2 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே கிடந்த பெண் சடலம்!!

இறந்த பிறகு 2 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே கிடந்த பெண் சடலம்!!
X

லண்டனில் குடியிருப்பில் வசித்துவந்த ஷீலா செலியோன் (58) என்பவர் சுமார் இரண்டு வருடத்திற்கு பின்னர் இறந்த நிலையில் அவரது வீட்டிலிருந்து எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டார்.

அவர் தனியாக வசித்து வந்த நிலையில் உயிரிழந்து இரண்டு வருடம் கழித்துத்தான் இந்த உண்மை வெளியே வந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அவர் வசித்துவந்த வீட்டை வீட்டுவசதி சங்கம் நிர்வகித்து வந்தது.

அவரின் ஒரு மாத வாடகை தாமதமான நிலையில் வீட்டுவசதி சங்கம் பெண்ணின் சமூக நலன்கள் பிரிவில் விண்ணப்பித்து அவரின் வாடகையை இரண்டு வருடங்களுக்கு மேலாகப் பெற்றுள்ளனர்.

london body 2

ஜூன் 2020இல் சமையல் எரிவாயு இணைப்பைச் சோதனை செய்யவந்த போது அவர் பதிலளிக்காததால் இணைப்பைத் துண்டித்துள்ளனர். ஆனால் ஒருவரும் வீட்டினுள் சென்று பார்க்கவில்லை. பிரேதப் பரிசோதனை செய்யமுடியாத வகையில் உடல் அழுகி விட்டது.

அவரின் பற்களைக் கொண்டு அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் இறந்த காலத்தைக் கண்டறிய விசாரணை நடத்தியதில், கடைசியாக ஆகஸ்ட் 2019ல் மருத்துவமனைக்கு தொடர்புகொண்டு சிகிச்சைக்கு முன்பதிவு செய்தது தெரியவந்தது.

london body 2

குளிர்சாதனப் பெட்டியிலிருந்த உணவுப் பொருட்கள், அவரின் மருந்துகள், கடைசியாக அவரே செலுத்திய வாடகை போன்றவற்றை வைத்து அவர் ஆகஸ்ட் 2019 இல் இறந்துள்ளார் என்று உறுதிப்படுத்தப்பட்டது.

ஒருவர் இறந்து இரண்டு வருடத்திற்கு மேலாகிக் கண்டுபிடித்திருப்பது என்பதை ஏற்றுக்கொள்வதற்குக் கடினமாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்காக வீட்டுவசதி சங்கம் மன்னிப்பு கோரியுள்ளது.

newstm.in

Next Story
Share it