Theme Check

நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்.. வெளியானது பதைபதைக்கும் வீடியோ காட்சி..!

நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்.. வெளியானது பதைபதைக்கும் வீடியோ காட்சி..!

நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்.. வெளியானது பதைபதைக்கும் வீடியோ காட்சி..!
X

கேரள மாநிலத்தில் நடைபெற்ற விபத்தில், சிறுவன் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தளிபரம்பா அருகே உள்ளது சொருக்காலா என்ற கிராமம். இங்கு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுவன் ஒருவன் தனது சைக்கிளில் ரோட்டை கடக்க முயல்கிறார்.

அப்போது, ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒரு பைக்கின் மீது மோதி தூக்கி வீசப்படுகிறார். அதே நேரத்தில், பின்னால் வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்காமல் நூலிழையில் தப்பித்துள்ளார்.

ஆனால் அவர் ஓட்டிவந்த சைக்கிள் பேருந்தில் சிக்கி சுக்கு நூறானது. சிறுவனுக்கு பெரிய ஆபத்து ஏற்படாமல், சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.



Next Story
Share it