புர்கா அணிந்து தியேட்டருக்கு போய் அடிவாங்கிய பிரபல நடிகை!!
புர்கா அணிந்து தியேட்டருக்கு போய் அடிவாங்கிய பிரபல நடிகை!!

பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் தனது நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
மாதுரி தீக்ஷித் அற்புதமான டான்சர். அவர் ஆடிய பாடல்களில் ஏக் தோ தீன் மிகவும் பிரபலமானது. அந்த பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானது. மொழி தெரியாதவர்கள் கூட அந்த பாடல் வீடியோவை பார்த்து ரசித்தார்கள்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாதுரி, என் நடிப்பில் வெளியான தேசாப் படம் பார்க்க தியேட்டருக்கு புர்கா அணிந்து சென்றேன். ஏக் தோ தீன் பாடலுக்காக காத்திருந்தேன். நான் முதல் வரிசையில் அமர்ந்திருந்தேன்.

பாடல் வந்ததும், அங்கிருந்தவர்கள் திரையை நோக்கி காசை வீசினார்கள். அந்த காசுகள் என் தலையில் பட்டு வலித்தது. இதையடுத்து அங்கிருந்து ஓடிவிட்டோம். ஆனால் லாபியில் என்னை பார்த்தவர்கள், ஏ மாதுரி தீக்ஷித் என்றார்கள்.
ஒரு முறை என் கார் டிரைவர் உணவு வாங்க சென்றார். எனக்கு என்ன உணவு வேண்டும் என்பதை பேப்பரில் எழுதிக் கொடுக்கச் சொன்னார். ஆனால் நானோ அடிக்கடி ஆட்டோகிராஃப் போடும் பழக்கத்தில், வித் லவ் மாதுரி தீக்ஷித் என்று எழுதுவிட்டேன் என்றார்.
" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">
மாதுரிக்கு காசால் அடி கிடைத்திருக்கிறது. இப்படி தனது வாழ்வில் நடந்த பல சுவாரஸ்ய சம்பவங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
newstm.in

