Theme Check

பிரபல பாம்பு பிடி மன்னன் கவலைக்கிடம்..!

பிரபல பாம்பு பிடி மன்னன் கவலைக்கிடம்..!

பிரபல பாம்பு பிடி மன்னன் கவலைக்கிடம்..!
X

கேரள மாநிலம் கோட்டயம் அருகே குறிச்சியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாகவும், அதை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கக்கோரி பிரபல பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷுக்கு போன் மூலம் தகவல் வந்தது.
Vava Suresh in critical condition after suffering from snake bite - KERALA  - GENERAL | Kerala Kaumudi Online
இதை தொடர்ந்து அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர், குறிப்பிட்ட அந்த வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை பிடித்து சாக்கில் போட்டு கட்ட முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த பாம்பு வாவா சுரேசின் வலது காலில் கடித்தது.

இதைக்கண்டு அங்கு நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே சிறிது நேரத்தில் வாவா சுரேஷ் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
நல்ல பாம்பு கொத்தியது: வாவா சுரேஷ் உடல்நிலையில் முன்னேற்றம்- Dinamani
பின்னர், அவரை மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story
Share it