இன்று தேர்வு எழுதும் நீட் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியானது..!

இன்று தேர்வு எழுதும் நீட் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியானது..!

இன்று தேர்வு எழுதும் நீட் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியானது..!
X

நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது.இந்த நிலையில், நீட் தேர்வுக்கான விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

அதில்,

  • அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். முகக்கவசம் அணியாமல் வரும் தேர்வர்களுக்கு என்95 முகக்கவசம் வழங்கப்படும்.
  • மதியம் 1.30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு தேர்வு மையத்திற்குள் அனுமதி இல்லை.
  • ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொண்டு குறைந்தபட்சம் இரண்டு நகல்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • சமீபத்தில் எடுத்த புகைப்படத்தின் கலர் நகல் ஹால் டிக்கெட்டில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
  • ஹால் டிக்கெட்டின் 2ஆம் பக்கத்தில் ஒட்டப்பட்டு இருக்கும் புகைப்படமும் போடப்பட்டிருக்கும் கையெழுத்தும், முதல் பக்கத்தில் உள்ள புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் ஒத்துப் போக வேண்டும்.
  • 2ஆம் பக்கத்தை ஒட்டப்பட்ட புகைப்படத்துடன் கொண்டு வர வேண்டும், இல்லையென்றால் மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • மாணவர்களின் கையெழுத்து ஹால் டிக்கெட்டின் பக்கம் இரண்டில் புகைப்படத்தின் மீது இடதுபக்கம் இருக்க வேண்டும்.

1

  • பெற்றோரின் கையெழுத்து ஹால் டிக்கெட்டில் உரிய இடத்தில் இருக்க வேண்டும்.
  • பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, 12ஆம் வகுப்பு ஹால் டிக்கெட், ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை என்று ஏதாவது ஒரு அரசு புகைப்பட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்.
  • செல்போன்களில் உள்ள அடையாள அட்டை நகல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தேர்வு எழுதி முடித்த பின், OMR தாளை தேர்வு கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு வினாத்தாளை மட்டுமே வெளியே கொண்டுவர வேண்டும்.
  • தேர்வறை கண்காணிப்பாளர் அனுமதி இல்லாமல் வெளியே செல்லக் கூடாது. தேர்வு எழுதும் முன், எழுதி முடித்த பின் என்று இரண்டு முறை வருகை பதிவில் நேரம் குறிப்பிட்டு கையெழுத்திட வேண்டும்.
  • இரண்டாவது முறை கையெழுத்திடாவிட்டால் விடைத்தாள் சமர்ப்பிக்கவில்லை என்று கருதப்படும். மாணவர்களின் வருகைப் பதிவு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்.
  • மாணவர்கள், வெளியே தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில், கூடுதல் புகைப்பட நகல்கள், ஹால் டிக்கெட்டை வைத்திருக்கலாம்.
  • எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன் உள்ளிட்டவை கொண்டு வரக்கூடாது.
  • மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட் உடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படுவர்.
  • தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு உடலின் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். அதில் வெப்பநிலை அதிகமாக இருந்தால், தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
  • தேர்வு முடிந்ததும் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை தேர்வறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வு தொடர்பான தகவல்களை தேசிய தேர்வு முகமை அலுவலக வெப்சைட் www.nta.ac.in-ல் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
Next Story
Share it