இந்திய அணிக்கு அடுத்த புதிய கேப்டன்.. மே.இ. தீவுகள் அணியுடன் மோதல் !!

இந்திய அணிக்கு அடுத்த புதிய கேப்டன்.. மே.இ. தீவுகள் அணியுடன் மோதல் !!

இந்திய அணிக்கு அடுத்த புதிய கேப்டன்.. மே.இ. தீவுகள் அணியுடன் மோதல் !!
X

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அங்கு நடைபெற்ற 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால் தொடர் சமனானது. டெஸ்ட் தொடருக்குப் பிறகு இங்கிலாந்தில் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய அணி. நாளை முதல் இருவது ஓவர் போட்டி தொடங்க உள்ளது. இங்கிலாந்துச் சுற்றுப்பயணம் ஜூலை 17 அன்று நிறைவடைகிறது.

இதன்பிறகு மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய அணி. மே.இ. தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜூலை 22 அன்று தொடங்கி ஜூலை 27 அன்று நிறைவடைகிறது.

dsf

ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணியில் ருதுராஜ் கெயிக்வாட், ஷுப்மன் கில், சஞ்சு சாம்சன், சிராஜ், அர்ஷ்தீப் சிங் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள். துணை கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ரிஷப் பந்த், பாண்டியா, ஷமி ஆகியோருக்கு இத்தொடரில் விளையாடுவதிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஒருநாள் அணி

ஷிகர் தவன் (கேப்டன்), ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெயிக்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்குர், சஹால், அக்‌ஷர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, சிராஜ், அர்ஷ்தீப் சிங்.




newstm.in

Tags:
Next Story
Share it