Theme Check

அடுத்த பிரச்சனை.. போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் !!

அடுத்த பிரச்சனை.. போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் !!

அடுத்த பிரச்சனை.. போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் !!
X

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். மாநில அளவில் பெரும் வெற்றியை பெற்ற திமுக கூட்டணிக்கு தருமபுரி மாவட்டத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகத்தால் புறக்கனிப்பதாகவும், மக்கள் பிரநிதியாக இல்லாத திமுக மாவட்ட பொறுப்பாளர்களை அரசு விழாவிற்கு அழைத்து வந்து திறப்பு விழா செய்வதாகவும், அதிமுக எம்எல்ஏக்களை தொடர்ந்து புறக்கனித்து வருவதாக புகார்கள் கூறி வருகின்றனர்.

dfs

இந்தநிலையில் இன்று அரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதிக்கு உட்பட்ட கீழானூர் கிராமத்தில் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைப்பதற்க்காக அந்த தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமாருக்கு அழைக்காமல் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி வந்து பூமிபூஜை போட்டதாகவும், இதனை கண்டித்து அரூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் மற்றும் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டனர்.

நேரில் வந்த அதிகாரிகள் தர்ணாவில் ஈடுப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர். அப்போது, வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கபடாமல் இருந்ததை அங்குள்ள வேலூர் மாநகர அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

sdf

அதேபோல் சட்டமன்ற உறுப்பினராக இல்லாத தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், செய்வறியாது தவித்த அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் சிறிது நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், அவர்கள் பிடிவாதமாக கலைந்துச் செல்ல மறுப்பு தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பதோடு, புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஒருவார கால அவகாசம் கேட்டனர். அதனை ஏற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்துச்சென்றனர்.

newstm.in

Next Story
Share it