திரைப்படத்தை வெளியிட திருடனாக மாறிய நடிகர்..!
திரைப்படத்தை வெளியிட திருடனாக மாறிய நடிகர்..!

சென்னை பூக்கடை காவல் நிலையம் அருகே உள்ள ஜவுளிக் கடையில் 5 லட்சம் ரூபாய், மற்றொரு கடையில் 1.5 லட்சம் ரூபாய் என, அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஆட்டோவில் வந்து இறங்கி நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து சென்றது பதிவாகியுள்ளது.
அந்த நபர் குறித்து விசாரித்ததில், திருவல்லிக்கேணியில் ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கி வந்த ஆனந்த் என்றும், பெங்களூருவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து ஆனந்திடம் இருந்து 3 செல்போன்கள், 4 லட்சம் ரொக்கம், கார், திருட்டு தொழிலுக்குத் தேவையான இரும்பு உபகரணங்கள், முகமூடி, கையுறை, தொப்பி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனந்த் மீது கர்நாடகாவில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
அத்துடன், அவர் தானே தயாரித்த ஒரு படத்தில் வில்லனாக நடித்துள்ளார். பொருளாதார பிரச்சனையால் அந்த படம் பாதியில் நின்றுள்ளது. எனவே, அந்தப் படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.