மாணவியை காதலித்து ஏமாற்றிய பாதிரியார் கைது..!
மாணவியை காதலித்து ஏமாற்றிய பாதிரியார் கைது..!

காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி மாணவியுடன் நெருங்கி பழகி ஏமாற்றிய பயிற்சி பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி போலீஸ் ஆயுதப்படை மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் இன்பராஜ். இவருடைய மகன் மில்டன் கனகராஜ் (26). இறையியல் படிப்பு முடித்து கே.டி.சி.நகர் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் பயிற்சி பாதிரியாராக உள்ளார்.
மில்டன் கனகராஜ், தன்னுடைய வீட்டிற்கு அருகில் வசித்த ஒரு மாணவியுடன் ஒன்றரை ஆண்டாக நெருங்கி பழகி உள்ளார். திருமணம் செய்வதாக கூறி நெருக்கமாக இருந்துள்ளார்.
ஆனால், மில்டன் கனகராஜின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்துள்ளனர். இதையறிந்த அந்த மாணவி சென்று கேட்டபோது, அவரை அவதூறாக பேசியதுடன், எரித்து கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த தாலுகா போலீசார், மில்டன் கனகராஜை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.