உதவித்தொகை இனி ரூ.2.50 லட்சம்.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!
உதவித்தொகை இனி ரூ.2.50 லட்சம்.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!

இரண்டு லட்சம் ரூபாயாக இருந்து வந்த பத்திரிகையாளர் மருத்துவ உதவித் தொகையை 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பத்திரிகையாளர்களுக்கு நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில், ‘பத்திரிகையாளர் நல வாரியம்’ அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
அத்துடன், தமிழகத்தில் உள்ள பத்திரிகை துறையினர் நலன் கருதி, பத்திரிகைத் துறையில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பிழை திருத்துவோர் பணியில் இருக்கும் போது மரணம் அடைந்தால் அவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து, குடும்ப உதவி நிதியாக அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கேற்ப 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு, பத்திரிகையாளர் நல நிதியிலிருந்து வழங்கப்பட்டு வரும் மருத்துவ உதவித்தொகை 2 லட்சம் ரூபாயை, 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Next Story