கணவனை குக்கரால் அடித்து கொலை செய்த மனைவி!!
கணவனை குக்கரால் அடித்து கொலை செய்த மனைவி!!

வெளிநாட்டிலிருந்து வந்த கணவனை, மனைவி குக்கரை கொண்டு அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மதுரவாடா பகுதியை சேர்ந்த முரளி என்பவருக்கும், மிருதுளா என்ற பெண்ணக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முரளிக்கு வெளிநாட்டில் பேராசிரியர் வேலையை கிடைத்தது. எனவே அவர் தனது மனைவி மகனை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். அந்த சமயத்தில் மிருதுளாவுக்கு அந்த பகுதியில் இருக்கும் சங்கர் என்ற 18 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு முரளி வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்த முரளியிடம் அவர் சரிவர பேசவில்லை. இதனால் முரளிக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மிருதுளாவும், சங்கரும் சேர்ந்து முரளியை கொல்ல திட்டமிட்டனர்.

அதன்படி, சம்பவத்தன்று இரவு முரளி தூங்கி கொண்டிருந்த சமயத்தில் மிருதுளா அவரது தலையில் குக்கரை கொண்டு அடித்து கொலை செய்தார். பின்னர் காதலனை அழைத்து இருவரும் முரளியின் சடலத்தை யாரும் பார்க்காத இடத்தில் தூக்கி போட்டனர்.
இரண்டு நாட்கள் கழித்து முரளியை தூக்கி போட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது, முரளியின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர்கள் அந்த உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதனிடையே முரளியின் தாய், தனது மகனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், துருவி துருவி விசாரித்ததில் மிருதுளா உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து காவல் அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

