Theme Check

‘கெத்து’ காட்ட ரயில் மீதேறி உயிரை விட்ட இளைஞர்!!

‘கெத்து’ காட்ட ரயில் மீதேறி உயிரை விட்ட இளைஞர்!!

‘கெத்து’ காட்ட ரயில் மீதேறி உயிரை விட்ட இளைஞர்!!
X

திருவள்ளூர் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாநில கல்லூரி மாணவர் , அதற்கு முன்னதாக ஓடும் ரயிலில் சக நண்பர்களுடன் சாகசம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது.

திருவாலங்காடு அடுத்த ஒரத்தூர் பகுதியை சேர்ந்த நீதிதேவன் (19) என்ற மாணவர் சென்னை மாநில கல்லூரியில் பொருளியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு ரயில் விபத்தொன்றில் உயிரிழந்தார்.

இவர் வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் செல்லும் புறநகர் ரயிலில் படியில் தொங்கியபடி சென்றபோது வேப்பம்பட்டு ரயில் நிலையத்திற்கும், செவ்வாப்பேட்டை நிலையத்திற்கும் இடையில் விபத்தில் சிக்கினார்.

student death1

இதில் மாணவர் முதலில் படுகாயமடைந்திருந்த நிலையில், அவரை மீட்ட பொது மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் படுகாயமடைந்த மாணவன் நீதிதேவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இறப்பதற்கு முன்பாக ரயிலில் சக நண்பர்களுடன் இணைந்து அவர் சாகசம் செய்த பழைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

newstm.in

Next Story
Share it