இந்த செய்தி உங்களை மனதார அழ வைக்கும்..!! இந்த நிலைமை எந்த ஒரு அப்பாவிற்கும் வர கூடாது..!!
இந்த செய்தி உங்களை மனதார அழ வைக்கும்..!! இந்த நிலைமை எந்த ஒரு அப்பாவிற்கும் வர கூடாது..!!

பீகாரின் சமஸ்டிபூர் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ் தாக்கூர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மகேஷ் தாக்கூரின் மகன் காணாமல் போனதாக கூறப்படுகிறது. மகனை பல இடங்களில் தேடியும் கிடைக்காதத சோகத்தில் இருந்த கேஷ் தாக்கூருக்கு, சதார் அரசு மருத்துவமனையில் காணாமல் போன மகனின் உடல் இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், மகனின் உடலை மீட்டு வர மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனை ஊழியர் ஒருவர் தங்கள் மகனின் உடலை ஒப்படைக்க தம்பதியிடம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களிடம் பணம் இல்லாததால், தங்கள் ஊரைச் சுற்றி எல்லோரிடமும் யாசகம் கேட்டு சுற்றி வருகின்றனர். அவர்களின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து பேசிய மகேஷ் தாக்கூர், “சில நாட்களுக்கு முன்பு என் மகன் காணாமல் போய்விட்டான். இப்போது, என் மகனின் உடல் சமஸ்திபூரில் உள்ள சதர் மருத்துவமனையில் இருப்பதாக எங்களுக்கு அழைப்பு வந்தது. என் மகனின் உடலை விடுவிக்க மருத்துவமனை ஊழியர் 50 ஆயிரம் கேட்டுள்ளார். நாங்கள் ஏழைகள், எப்படி? இந்தத் தொகையைச் செலுத்த முடியுமா?” என்று கூறினார்.
மகன் இறந்து விட்டான் என சோகத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கு தன் சொந்த மகனின் உடலை பெற கூட பணம் இல்லாமல் ஒவ்வொரு வீட்டிற்கு போய் பிச்சை எடுக்கிறார்... இந்த நிலைமை எந்த ஒரு அப்பாவிற்கும் வந்து விட கூடாது

மருத்துவமனையில் பணியாற்றும் பெரும்பாலான சுகாதாரப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருவதால், அவர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் கிடைப்பதில்லை. நோயாளிகளின் உறவினர்களிடம் இருந்து ஊழியர்கள் பணம் பறித்த சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளன. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
“இப்படி ஒரு நிலைமைக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டவர்கள், அவர்கள் தப்ப மாட்டார்கள். இது மனித குலத்திற்கு அவமானம்” என்று சமஸ்திபூர் சிவில் சர்ஜன் டாக்டர் எஸ்.கே. சௌத்ரி கூறியுள்ளார்.
" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

