வாங்காத கடனுக்கு தவனைதொகை செலுத்தகோரி மிரட்டல்.. சின்னத்திரை நடிகை வேதனை !!

வாங்காத கடனுக்கு தவனைதொகை செலுத்தகோரி மிரட்டல்.. சின்னத்திரை நடிகை வேதனை !!

வாங்காத கடனுக்கு தவனைதொகை செலுத்தகோரி மிரட்டல்.. சின்னத்திரை நடிகை வேதனை !!
X

தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பான காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் அஞ்சலி - பிரபாகரன் தம்பதி. சில சின்னத்திரையிலும் நடித்துள்ளனர். இந்த இளம் தம்பதி சென்னை நீலாங்கரை பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து தங்களது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், அஞ்சலியின் தந்தை கண்ணன், கடந்த 2019ஆம் ஆண்டு நீலங்கரையில் உள்ள செல்போன் விற்பனை கடையில் தனியார் வங்கியின் (idfc bank) மூலம் மாதத் தவணை முறையில் செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது கண்ணன் தனக்கு தெரிந்த நபர் என்ற முறையில் தனது மகள் அஞ்சலியின் செல்போன் எண்ணை கொடுத்துள்ளார்.

anjali prabhakaran

இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு கண்ணனும், அதன்பின் 2021ஆம் ஆண்டு அவரது மனைவியும் காலமாகிவிட்டனர். இதனையடுத்து கடந்த வாரம் கண்ணன் மகள் அஞ்சலியை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தனியார் வங்கியில் (IDFC bank) இருந்து பேசுவதாகவும், கண்ணன் என்பவர் சாட்சியமாக உங்களது செல்போன் எண்ணை கொடுத்திருப்பதாக தெரிவித்ததுடன் கண்ணன் மாதத் தவணையில் செல்போன் வாங்கிவிட்டு அசலும், வட்டியும் கட்டவில்லை ஆகையால் பணத்தை நீங்கள் தான் செலுத்த வேண்டும் என அஞ்சலியிடம் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அஞ்சலி மற்றும் அவரது கணவர் பிரபாகரன் தங்கள் தரப்பு நிலைமையை எடுத்து கூறியுள்ளார். அதில் 2018ஆம் ஆண்டு முதல் தனது தாய், தந்தையை பிரிந்து வாழ்வதாகவும், 2019ஆம் ஆண்டு திருமணமாகி கணவருடன் வசித்து வருவதாகவும், எனவே தனது தந்தை வாங்கிய செல்போன் தொடர்பாக எந்த தகவலும் தனக்கு தெரியாது என கூறினர்.

குறிப்பாக தனது தந்தை, தாய் இரண்டு பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் அஞ்சலி கூறியதை சிறிதும் கேட்காமல் தொடர்ந்து தனியார் வங்கியிலிருந்து போன் செய்து பணத்தைக் செலுத்துமாறு சிலர் வற்புறுத்தி வந்துள்ளனர்.

anjali prabhakaran

ஒரு கட்டத்தில் அஞ்சலி சட்டரீதியாக நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்ததையடுத்து, சில நாட்களுக்கு பிறகு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராமமூர்த்தி என்று ஒரு நபர் போன் செய்து மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

அவரை தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி பேசுவதாக கூறி ஒரு நபர் சட்ட நடவடிக்கை வேண்டாம், சமரசமாக செல்லுங்கள் என்று கூறியதுடன் வழக்கறிஞரை தொடர்பு கொள்ளுமாளும் , பணத்தை செலுத்தி இந்த பிரச்சினையை முடிக்க வேண்டும் என அஞ்சலியிடம் கூறியுள்ளார், என அந்த வீடியோவில் இருவரும் குறிப்பிட்டனர்.

இந்த உரையாடல்கள் அனைத்தையும் சின்னத்திரை நடிகை தனது செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it