இன்றே கடைசி..!! மறந்துடாதீங்க..!!
இன்றே கடைசி..!! மறந்துடாதீங்க..!!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் தொழில் வரியினை செலுத்த இன்றே கடைசியாகும். தவறினால் வட்டி விதிக்கப்படுமெனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுவரை 8,18,451 பேர் சொத்து வரியும், 80,496 பேர் தொழில் வரியும் செலுத்தியுள்ளனர். இதில் இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலமாக சொத்துவரி அல்லது தொழில் வரி செலுத்தும்போது ஏதேனும் குறைபாடுகள், சிக்கல்கள் ஏற்பட்டால் வரி செலுத்துவோர் பெருநகர சென்னை மாநகராட்சியின் ‘1913’ என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Next Story

