தொடர்ந்து அதிகரிக்கும் தக்காளி விலை… மக்கள் கலக்கம்!! இன்றைய விலை நிலவரம்!!
தொடர்ந்து அதிகரிக்கும் தக்காளி விலை… மக்கள் கலக்கம்!! இன்றைய விலை நிலவரம்!!

சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதிக வெயில், திடீர் கோடை மழை காரணமாக பல பகுதிகளிலும் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி பல பகுதிகளில் ரூ.120 வரை உயர்ந்துள்ளது.
திருமணம் போன்ற சுப காரியங்கள் காரணமாக தேவை அதிகரித்துள்ள நிலையில், வரத்து குறைந்துள்ளதால், இந்த விலை உயர்வு தொடர்ந்து நீடிக்கும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் வெளிச் சந்தையில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த, பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
ஆனாலும், இன்று சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், சில்லறை கடைகளில் 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
newstm.in

