தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சுற்றுலா வேன்!!
தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சுற்றுலா வேன்!!

கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
வெங்கக்கல்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளகோவில் நோக்கி வந்த சுற்றுலா வேன் சாலையை கடக்க முயன்றது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது மோதாமல் ஓட்டுனர் வேனை திருப்பிய போது தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

20க்கும் மேலான ஆண்கள் மற்றும் பெண்கள் பயணித்த வேனில் வந்த 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் மற்றும் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மீட்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த தாந்தோனிமலை காவல் நிலைய போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலுக்கு சென்றுவிட்டு சுற்றுலா வாகனத்தில் திரும்பி வந்துகொண்டிருந்த நபர்கள் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.
newstm.in

