Theme Check

சுற்றுலா பயணிகளே, திருவள்ளுவர் சிலைக்கு போகாதீங்க..!

சுற்றுலா பயணிகளே, திருவள்ளுவர் சிலைக்கு போகாதீங்க..!

சுற்றுலா பயணிகளே, திருவள்ளுவர் சிலைக்கு போகாதீங்க..!
X

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், கடலின் நடுவே நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறையின் மீது 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது.

இந்தச் சிலை அமைக்கும் பணி கடந்த 1990-ம் ஆண்டில், அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டு, 1.1.2000 அன்று திறந்து வைக்கப்பட்டது. உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை வேறெங்கும் இல்லை என்ற பெருமையை இந்த சிலை பெற்றுள்ளது.

கடலில் அமைந்துள்ள இந்த சிலை உப்புக் காற்றால் சேதமடைவதை தடுக்க 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த 2004, 2008, 2013 மற்றும் 2017 ஆண்டுகளில் ரசாயனக் கலவை பூசப்பட்டது. 5-வது முறையாக 2021-ம் ஆண்டு ரசாயனக் கலவை பூசப்பட வேண்டும்.

ஆனால், கொரோனா பரவல் காரணமாக பணிகள் நடைபெறவில்லை. இதையடுத்து, இந்த ஆண்டு ரசாயனக் கலவை பூசும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி இன்று (6-ம் தேதி) முதல் தொடங்க உள்ளது. இந்த பணிகள் சுமார் 5 மாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இந்த பணிகள் முடியும் வரை திருவள்ளுவர் சிலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it