உளுந்தூர்பேட்டை அருகே நடந்த சோகம்..!! ரயில் மோதி வாலிபர் பலி!!

உளுந்தூர்பேட்டை அருகே நடந்த சோகம்..!! ரயில் மோதி வாலிபர் பலி!!

உளுந்தூர்பேட்டை அருகே நடந்த சோகம்..!! ரயில் மோதி வாலிபர் பலி!!
X

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புதுதெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (34). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஸ்ரீதருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரது குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

train-suicide

இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாம்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில் மோதி படுகாயமடைந்த ஶ்ரீதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஸ்ரீதரின் உடலை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் ஸ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Ulundurpet

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Share it