ஆப்கானிஸ்தானில் சோகம்.. 155 குழந்தைகள் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் சோகம்.. 155 குழந்தைகள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் கடந்த 22ஆம் தேதி காலையில் 6.1 என்ற ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பக்திகா மற்றும் கோஸ்ட் மாகாணத்தில் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 3,000-க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின. எனினும் நாடு முழுவதும் இதன் தாக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்துக்கு 1,150 பேர் உயிரிழந்ததாகவும் 1,600 பேர் காயம் அடைந்ததாகவும் தலிபான்ஆட்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும் வீடுகள், உமைகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். அவர்கள் அரசின் உதவியை எதிர்பார்த்து உள்ளனர்.
இந்நிலையில் ஆப்கனில் நிலநடுக்கத்துக்கு உயிரிழந்த குழந்தைகள் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. பக்திகா மாகாணத்தில் நிலநடுக்கத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கயான் மாவட்டத்தில் அதிக குழந்தைகள் இறந்துள்ளன.
பக்திகா மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் மேலும் 250 குழந்தைகள் காயம் அடைந்துள்ளதாக ஐ.நா.வின் மனிதாபிமான உதவிகள் ஒருங்கிணைப்பு அமைப்பு நேற்று முன்தினம் தெரிவித்தது. இதனால் அங்கு குழந்தைகளுக்கு உரிய உதவிகள் அளிக்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
newstm.in